தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Monday, January 16, 2017

TET:உளவியல்(PSYCHOLOGY) - PART - 3

 

உளவியல்(PSYCHOLOGY) - PART - 3


1. பியாஜேயின் அறிதல் வளர்ச்சி கொள்கை:

அறிதிறன்:
  • 'நெய்சா' என்ற அறிஞரின் கருத்துப்படி, புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கியமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உலகி செயல்களின் அடிப்படையில் ஆராய்ந்து அவைபற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் எனப்படும். வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல்களே "அறிதிறன் செயல்கள்(COGNITIVE PROCESS)" ஆகும்.
அறிதிறன் வளர்ச்சி:

  • சுவிட்சர்லாந்து நாட்டு அறிஞரான ஜீன் பியாஜே என்பாரது  கருத்துப்படி, அறிதிறன் வளர்ச்சியானது ஷோடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசைக்கிரமமாக அமைந்தபால படிநிலைகளில் நிகழ்கிறது.
பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சியின் 4 படிகள்:
     
I. புலன் இயக்க நிலை(Sensory - Motor Stage):
  • புலன்களை பயன்படுத்தி வெளியுலகை அறிகிறது.
  • மொழியை பயன்படுத்தத் தெரியாது 
  • குறியீடுகளை பயன்படுத்த தெரியாது 
  • பொருள்களின்  நிலைத்தன்மை பற்றி அறிகிறது.
II. முன்செயல் பாட்டு நிலை (Pre-Operational Stage):

  • பிம்பங்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மொழி வளர்ச்சி தொடங்குகிறது.
  • தன்னை மையமாகக் கொண்டு சொற்களுக்கு பொருள் காணுதல்(Ego - Centric)
  • உயிரற்ற ஜடாபி பொருள்களையும் உயிருள்ளவைகளாக பாவித்தல்(Animism)
  • பொருள்களின் அளவு மாறாத்தன்மை உணரப்படாது(No Coservation)
  • முன்பின் மாற்றம் இருக்காது.(No Reversibility )
  • ஒரு சமயத்தில் ஒரு பொருளின் ஒரு பண்பினை மட்டும் அறிதல்(Centring) 
  • பொம்மைகளை உண்மையானவை என உணர்தல்(Realism)

III. புலனியிடான செயல்நிலை(Concrete Operational Stage):


  • ஒரே சமயத்தில் பலப்பண்புகளை பற்றி சிந்திக்க முடிகிறது 
  • முன்பின் மாற்றம்(Reversebility)
  • பொருள்களின் அளவு மாறாத்தன்மை(Conservation) 
  • வகைப்படுத்தல், வரிசைப்படுத்தல்(Ordering)
  • இடம் காலம் சார்ந்த தொடர்புகளில் தெளிவு காணப்படும்
  • ஈடு செய்தல்(Compensation), தனித்துவம்(Identity)
IV. முறையான செயல்நிலை (Concrete Operational Stage):

  • புலன் தொடர்பற்றவை பற்றி சிந்திக்க முடிகிறது 
  • ஆய்வுக்கான கருது கோள்களை உருவாக்கும் திறன் எழுகிறது.
2.சிந்தனையும், மொழியும்(Thinking and Language):

      மொழியென்பது தனது எண்ணங்களை பிறர்க்குத் தெரியப்படுத்த மனிதனால் வகுக்கப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களை கொண்ட ஒரு தொகுப்பாகும்.

      பின்பற்றல், வலுப்படுத்த போன்றன  குழந்தைகளின் மொழி வளர்ச்சியில் முக்கிய பங்கு பெறுகிறது.

 மொழிசார் மனவியல்:

     உலா மொழியியல் என்பது மொழி மற்றும் உளவியல் முறைகளையும் பயன்படுத்தி மொழித் திறனைப் பெற்று அதனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உளநிகழ்ச்சி அல்லது செயல்களைக் குறிப்பிடுவதாக அமைகிறது.

    "Psycho linguistic" என்ற சொல்லை ஆஸ்குட் மற்றும் செபியோக் என்பவர்கள் பிரபலப்படுத்தினர்.

  • சோம்ஸ்கி உளமொழியியலுடன் தொடர்புடையவர்.
  • எல்லாமொழிகளும் சில குறிப்பிட்ட வோரிமஸ் என்ற அடிப்படை ஒலிகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
  • மொழியில் உள்ள எளிய பொருள் தரக்கூடிய அமைப்பு மார்பீம்ஸ் எனப்படும்.

சிந்தனை(THINKING):

     இது அறிதிறன் செயல்களில் முக்கியமானதாகும். சிந்தனையின் கருவிகள் நான்கு வகை படும். அவை,
  • பிம்பங்கள் 
  • கருத்து 
  • குறியீடுகள் 
  • மொழி 

சிந்தனையின் வகைகள்:
  • புலன் காட்சி சிந்தனை - புலன்கள் மூலமாக உணர்தல் 
  • பொதுமை கருத்துக் சிந்தனை - கதைகளின் மூலமாக உணர்தல் 
  • தர்க்க சிந்தனை -இதனை குவிசிந்தனை என்றும் கூறலாம்.
  • உருவாக்கும் சிந்தனை - இதனை விரி சிந்தனை என்றும் கூறலாம் (எ.கா. அறிஞர்கள், கவிஞர்கள்)

சிந்தனையை பாதிக்கும் கருவிகள்:

  • நுண்ணறிவின் குறைந்த அளவு 
  • போதிய பொதுக் கருத்துக்களை பெற்றிறாமை 
  • தவறாக சிந்திக்கும் பழக்கம் 
  • சொற்களஞ்சிய அளவு குறைந்து காணப்படல் 
  • சார்பெண்ண்ங்கள் சிந்தனையில் குறுக்கிடல் 
கற்பனை(IMAGINATION):

     பிம்பங்கள் அல்லது சாயல்கள் துணை கொண்டு நிகழும் சிந்தனை கற்பனை எனப்படும். 
     
     கற்பனையின் வகைகள் பற்றி சுருக்கமாக காண்போம்,
  • மீள் ஆக்கள் கற்பனை நினைவுபடுத்திக்கொள்ளுதல் 
  • ஆக்கக் கற்பனை. இது இரு வகைப்படும். அவை,
                     1. பயன்வலிக் கற்பனை - இது கட்டுப்பாடு கொண்டது 
                     2. அழகுநர் கற்பனை - இது கட்டுப்பாடு அற்றது 

ஆய்வுத்திறன்(REASONING):

     ஆய்வுத்திறன் என்பது புதிர் தீர்த்தல் அல்லது பிரச்னைக்கு விடை கானல் ஆகும்.

தொகுத்தறிதல் ஆய்வுத்திறன்:

     சிறு சிறு நியதிகளிலிருந்து ஒரு பொது அல்லது கோட்பாட்டை யூகித்தலாகும்.

பகுத்தறிதல் ஆய்வுத்திறன்:

     பொது விதியை ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குப் பயன் படுத்துதல்.

பிரச்சினைக்குத் தீர்வு காணல்:
 
     ஜான் டூயி 5 படிகளை குறிப்பிடுகிறார். அவை, கீழ்கண்டவாறு
  • பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு(Awareness of the Problem)
  • தகவல்களை சேகரித்தல்(Collecting and Organizing)
  • கருது கோள்களை உருவாக்குதல்(Formulating Hypothesis)
  •  சரிபார்த்தல்(Evaluation & Verification)
  •  பொதுமைப்படுத்தல் (Formulation of a generalization)

உளச்சார்பு (அ) நாட்டம்(APTITUDE):
     குறிப்பிட்டது துறையில் ஆர்வமும், திறனும் மிகுந்திருத்தல் நாட்டம் எனப்படும்.


  • முன்னறி சோதனைகள்:
              ஒருவர் ஒரு துறையில் எந்த அளவு வெற்றி பெறுவார் என்பதை முன்கூட்டியே அறிய உதவும் சோதனை முன்னறி சோதனை ஆகும்.

  • அடைவு சோதனை(Achievement Test):
             அடைவு சோதனையின் மூலம் ஒருவரது நிகழ்கால திறனளவு அறியப்படுகிறது.

நாட்டச் சோதனைகள்:
  1. ஸீ ஷோரின் இசை நாட்டச் சோதனை
  2. பொறியியல் நாட்டச் சோதனைகள் 
  3. பல் நாட்டச் சோதனை- இதில் 8 உள் சோதனைகள் உள்ளன. அவை, கீழ்கண்டவாறு அறியலாம்.
  • சொல் ஆய்வு 
  • எண்ணாற்றல் 
  • கருத்தியல் ஆய்வு 
  • இடத்தொடர்புகள் 
  • பொறியியல் ஆராய்ந்தறிதல் 
  • எழுத்தர் தொழிலுக்கான வேகமும், துல்லியமும் 
  • மொழியை கையாளுதல்(சரியான எழுத்துக்களை பயன்படுத்தல்)
  • மொழியை கையாளுதல்(வாக்கியத்தில் தவறை சுட்டிக்காட்டுதல்) 
கவர்ச்சி(INTEREST):

     ஒரு பொருளுடனோ அல்லது ஒரு செயலிலோ முழுமையாக ஒருவர் ஒன்றிப்போதல் அதில் அவனது கவர்ச்சியைக் குறிக்கும்.

முதிர்ச்சி(MATURITY):

     நிலைக்கு ஏற்ப கவர்ச்சிகள் மாணவர்களிடையே காணப்படுகிறது. இவற்றில் பொருளாதார நிலை, இனம் போன்றவற்றின் அடிப்படையில் வேற்றுமைகள் காணப்படுகின்றன.

மனப்பான்மை(ATTITUDE):

     மனப்பான்மையென்பது ஒருவர்  சூழ்நிலைக்கு கூறுகளான மனிதர்கள், பொருள்கள், கருத்துக்கள் ஆகியவைகளுக்கு கற்றலின் விளைவாக குறிப்பிட்ட துளங்களை நிகழ்த்துவதற்கான தயார் நிலையைக் குறிக்கிறது.

மனப்பான்மையை அளவிடும் முறைகள்:
  • தர்ஸ்டன் முறை 
  • லிக்கர்ட் முறை     


No comments:
Write comments